Saturday, December 6, 2014

கோயம்பத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா நூற்றாண்டு ஐஏஎஸ் பயிற்சி மையம் தமிழக அரசின் நிதி உதவிடன் செயல்பட்டு வருகிறது.
ஐஏஎஸ், ஐபிஎஸ உள்ளிட்ட சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு எழுத விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மையத்தில் மாதாந்திர உதவித்தொகையுடன் 6 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சியில் சேர விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்புவோர் டிசம்பர் 30ம் தேதியன்று நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுப்படுவர்.
நுழைவுத்தேர்வு டிசம்பர் 30ம் தேதியன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை பாரதியார் பல்கலைக்கழக டாக்டர்.உஷா மேத்தா அரங்கில் நடைபெறும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் டிசம்பர் 15ம் தேதிக்குள் சென்றடையுமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எச்டி.,(மேலாண்மை) படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பி.எச்டி.,மேலாண்மை படிப்புக்கு அங்கீகாரம் பெற்ற பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ.,வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.950 வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் 20ம் தேதி நடைபெறுகிறது. கூடுதல் தகவல்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.