Thursday, April 2, 2015

பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய, மாநில அரசுத் துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகமான பணி வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்த பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில அரசுகள் தேர்வாணையங்கள் மூலம் போட்டித் தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகின்றன.  என்று அழைக்கப்படும் (யு.பி.எஸ்.சி) மருத்துவப் பணி மற்றும் பொறியாளர் பணிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை அறிவித்துள்ளது. 
மருத்துவப் பணி:
மத்திய அரசுப் பணியில் சேர வேண்டுமானால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வெழுதி (Combined Medical Services Exmn) நேரடியாக ரயில்வே துறையில் உதவிக் கோட்ட மருத்துவ அதிகாரி, இந்திய ஆர்டினன்ஸ் ஃபேக்டரி சர்வீசஸ் சுகாதாரப் பணியில் உதவி மருத்துவ அதிகாரி, மத்திய அரசின் சுகாதாரப் பணிகளில் மருத்துவ அதிகாரி, தில்லி மாநகராட்சி மருத்துவ அதிகாரி போன்ற பணிகளில் சேரலாம்.
தமிழக அரசுப் பணியில் சேர வேண்டுமானால் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக அசிஸ்டென்ட் சிவில் சர்ஜன் பணியில் சேரலாம். பொது மருத்துவம், மருத்துவக் கல்வி, கிராமப்புற சுகாதாரப் பணி எனக் குறிப்பிட்ட துறைக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தகுதி: ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான தேர்வை எழுத குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எம்.பி.பி.எஸ். படிப்பு. இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 32. ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வில் மருத்துவப் பாடங்கள் சம்பந்தப்பட்ட 2 தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் தலா 250 மதிப்பெண் வீதம் மொத்தம் 500 மதிப்பெண்கள். முதல் தாளில் பொது அறிவு தொடர்பான 30 வினாக்களும், பொது மருத்துவம் தொடர்பான 70 வினாக்களும், குழந்தை மருத்துவத்தில் 20 வினாக்களும் இடம்பெறும். நேர்முகத் தேர்வுக்கு 100 மதிப்பெண். இரண்டாம் தாளில் அறுவை சிகிச்சைக்கு 40 வினாக்களும், மகப்பேறு மருத்துவத்தில் 40 வினாக்களும், வரும்முன் காப்பது மற்றும் சமூகநல மருத்துவம் தொடர்பாக 40 வினாக்களும் இடம்பெறும்.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகள் தேர்வுக்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த மருத்துவப் பணிகளுக்கான போட்டித் தேர்வை யு.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் ரயில்வே உதவி கோட்ட மருத்துவ அதிகாரி பணியில் 600 காலியிடங்களும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தளவாடத் தொழிற்சாலை மருத்துவ சேவை மையத்துக்கு 39 இடங்களும், ஜூனியர் ஸ்கேல் போஸ்ட் இன் சென்ட்ரல் ஹெல்த் சர்வீஸில் 391 இடங்களும், டெல்லியின் கிழக்கு, வடக்கு, தெற்கு மாநகராட்சிகளுக்கு கிரேடு 2 மருத்துவ அதிகாரி பணிக்கு 372 இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015

பொறியாளர் பணி:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் அண்ட் டெலிகம்யூனிகேஷன் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 475 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்திய ரயில்வே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் வரும் தளவாடத் தொழிற்சாலை மற்றும் தில்லி மாநகராட்சிக்கு பணிக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.021.2015 ஆம் தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.04.2015
மேலும் தேர்வுக் கட்டணம், தேர்வு செய்யப்படும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.