Sunday, July 6, 2014

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பி.எஸ்சி ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஓடி உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்குகிறது. அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் வரும் 18-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.350 யை விண்ணப்பதாரர்கள், செயலாளர், தேர்வுக் குழு என்ற பெயரில் எடுக்கப்பட்ட காசோலையாக செலுத்த வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
மேலும் விபரங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment