சென்னையில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற, மாணவ, மாணவியரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்லுாரி மாணவ, மாணவியர், விளையாட்டு துறையில் சாதிக்க,விஞ்ஞான ரீதியான பயிற்சி, தங்குமிடம், சத்தான உணவுடன் கூடிய மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதிகள், சென்னை நேரு விளையாட்டரங்கிலும், மாணவியருக்கு, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும் செயல்படுகின்றன. பிளஸ் 2 பயிலும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தகுதியுடையவர்கள்.தனிப் போட்டியில் விண்ணப்பிப்போர், மாநில அளவில், குடியரசு, பாரதியார் தின விளையாட்டு, அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் நடத்தும் போட்டிகளில்,முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவில், இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு, கழகங்கள் சார்பில் நடந்த போட்டியில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். குழு போட்டிகளில் விண்ணப்பிப்போர், மாநில அளவில், குடியரசு தினம், பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், கழகங்கள் நடத்தும் போட்டிகளில், முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
மாநில அளவில் தேர்ச்சி பெற்று, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு, கழகங்கள், ஊரக விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாவட்ட தலைநகரங்களில் உள்ள, விளையாட்டு அலுவலகத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 18ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment