Tuesday, November 29, 2016

தபால்காரர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

தபால்காரர் மற்றும் மெயில்கார்டு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு தபால்துறை வட்டத்தில், 310 தபால்காரர் மற்றும் மெயில்கார்டுகளுக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதற்கான தேர்வு,டிச., 11ம் தேதி அறிவிக்கபட்ட நிலையில்தேர்வாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் மதுரையிலுள்ள மத்திய தபால் பயிற்சி மையத்தில் நேற்று துவங்கின.
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு டிச., 1 முதல் 3 வரையிலும்மூன்றாம் கட்ட பயிற்சி டிச., 4 முதல் 6வரையிலும் நடத்தப்படுகிறது. தபால் துறையில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள்தபால் ஊழியர்களின் வாரிசுகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இதில் பங்கேற்று பயனடையலாம்.
தபால் துறை முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளர் (ஓய்வு) பக்தவச்சலம்கேட்டக் கண்காணிப்பாளர் (ஓய்வு) கருணாநிதி ஆகியோர் இணைந்து பயிற்சி வழங்குகின்றனர். நாளொன்றுக்கு, 300 ரூபாய் வீதம், 900 வரை கட்டணம் செலுத்த வேண்டும். 
தபால்காரர் தேர்விற்குரிய புத்தகங்கள் பயிற்சி வகுப்பில் வினியோகிக்கப்படுகின்றன. ஆர்வமுள்ளோர், 94433 29681 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment