கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில், இந்த கல்வியாண்டில் பொதுப்பிரிவில் மாணவியர் சேர்க்கைக்கான, முதல்கட்ட கலந்தாய்வு, கடந்த, 8 மற்றும், 9ல் நடந்தது. நேற்று முன்தினம் துவங்கிய, இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது.
நேற்று, அறிவியல் பாடப்பிரிவினருக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 500க்கும் குறைவான கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு, கணிதம், வேதியியல், கணினி அறிவியல், உயிர் வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது.
இன்று, தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடத்திற்கான கடைசி கட்ட கலந்தாய்வு நடக்கிறது. இந்த இரண்டாம் கட்ட கலந்தாய்வில், 63 இடங்களுக்கு, 600க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment