Wednesday, September 14, 2016

தபால் ஆய்வாளர் தகுதித்தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

தபால் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வு தகுதித்தேர்விற்குதகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தபால்துறையின்குரூப் பி பிரிவின் கீழ் தபால் ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். தேசிய பணியாளர்கள் தேர்வு ஆணைய நேரடித்தேர்வு மற்றும் பதவி உயர்வு தகுதித்தேர்வு அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில்தபால்துறையின்குரூப் -சி மற்றும் குரூப் -டி ஊழியர்கள்தகுதித்தேர்வு எழுதி தபால் ஆய்வாளராக பதவி உயர்வு பெறலாம்.
இவர்களுக்கான தேர்வு அக்., 22 மற்றும் 23 தேதிகளில் நடக்கவுள்ளதால்தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை தபால் கோட்ட அலுவலகங்களில் வரும் 30 வரை வினியோகிக்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளோர்விண்ணப்பங்களை பூர்த்தி செய்துகோட்ட அலுவலகத்தில்அக்., 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இயலாதோர்அக்., 10க்குள் வட்டார தபால் இயக்குனரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம். ஹால் டிக்கெட்கள்அக்., 15ல் வினியோகிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment