தபால் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர்வு தகுதித்தேர்விற்கு, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தபால்துறையின், குரூப் பி பிரிவின் கீழ் தபால் ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். தேசிய பணியாளர்கள் தேர்வு ஆணைய நேரடித்தேர்வு மற்றும் பதவி உயர்வு தகுதித்தேர்வு அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில், தபால்துறையின், குரூப் -சி மற்றும் குரூப் -டி ஊழியர்கள், தகுதித்தேர்வு எழுதி தபால் ஆய்வாளராக பதவி உயர்வு பெறலாம்.
இவர்களுக்கான தேர்வு அக்., 22 மற்றும் 23 தேதிகளில் நடக்கவுள்ளதால், தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை தபால் கோட்ட அலுவலகங்களில் வரும் 30 வரை வினியோகிக்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளோர், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கோட்ட அலுவலகத்தில், அக்., 4க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இயலாதோர், அக்., 10க்குள் வட்டார தபால் இயக்குனரிடம் நேரடியாக சமர்ப்பிக்கலாம். ஹால் டிக்கெட்கள், அக்., 15ல் வினியோகிக்கப்படுகின்றன
No comments:
Post a Comment