Saturday, May 3, 2014

உதகை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 2ம்தேதி முதல் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உதகை அரசு கலைக்கல்லூரியில் 2014-15ம் கல்வியாண்டின் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஒற்றை சாளர முறையில் நடைபெறவுள்ளது. சேர்க்கை விண்ணப்பங்கள் மே 2ம்தேதி முதல் கல்லூரி அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படும்.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.27 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் சாதி சான்றிதழின் அசல் மற்றும் அதன் நகலினை சமர்ப்பித்து ரூ.2 மட்டும் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment