Tuesday, May 13, 2014

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம் நாளை முதல் வினியோகம்

ஆசிரியர் பயிற்சி படிப்பு விண்ணப்பம், நாளை முதல், ஜூன் 2ம் தேதி வரை, மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வி ஆண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றை நிரப்ப, நாளை முதல், விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., ஆகிய பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான சான்றிதழை காட்டி, 250 ரூபாய் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். இதர பிரிவு மாணவர், 500 ரூபாய் கொடுத்து, விண்ணப்பம் பெறலாம். விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், ஜூன், 2ம் தேதி கடைசி நாள்.

No comments:

Post a Comment