Sunday, May 4, 2014

அரசு கலைக் கல்லுாரியில் மே 30ல் உடனடித் தேர்வு

அரசு கலைக் கல்லுாரியில், மே 30ல் உடனடித் தேர்வுகள் நடக்கிறது; தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மே 29ல் ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.
அரசு கலைக் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரமோத்குமார் கூறியதாவது:அரசு கலைக் கல்லூரி தேர்வில் மறு மதிப்பீடு செய்யும் இளங்கலை மாணவர்கள் விடைத்தாள் ஒன்றுக்கு 300 ரூபாய் மற்றும் விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் விடைத்தாளுக்கு 500 ரூபாயும், விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும் செலுத்த வேண்டும். அதேபோல், எம்.சி.ஏ., பாடத்திலுள்ள விடைத்தாள் ஒன்றுக்கு 600 ரூபாயும், விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும் கல்லுாரி வளாகத்திலுள்ள யூகோ வங்கியில் செலுத்தி, தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று, மே 20 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த 2011 -- 14ம் ஆண்டுவரை பயின்ற மூன்றாமாண்டு இளங்கலை மாணவ, மாணவியர், 2012 - -14ம் ஆண்டு வரை பயின்ற இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவ, மாணவியர் மற்றும் 2011 - -14ம் ஆண்டு வரை பயின்ற மூன்றாம் ஆண்டு எம்.சி.ஏ., மாணவர்கள், ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தவறியிருந்தால், உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளங்கலை மாணவர்கள் 575 ரூபாயும், முதுகலை மாணவர்கள் 675 ரூபாயும் யூகோ வங்கியில் (கணக்கு எண்: 1612) செலுத்தி, தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று, மே 20ம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.உடனடி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மே 29ம் தேதி, ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மே 30ம் தேதி காலை 10.00 மணிக்கு உடனடி தேர்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment