Saturday, May 3, 2014

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
இப்பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தமிழ்ப்பேராயம் அமைப்பின் கணினித் தமிழ் கல்வித்துறை சார்பில் கணினித்தமிழ் அடிப்படை,பயன்பாடு குறித்த ஒரு மாத கால சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கணினியில் தமிழை பயன்படுத்துவது, இணையதமிழ் பயன்பாட்டைப் புரிந்து கொண்டு, தமிழ் மென்பொருள் உருவாக்குவதற்கான அடிப்படை அறிவாற்றலை பெறவும், வேலைவாய்ப்பைப் பெறவும் வாய்ப்புள்ளது. இதில் சேர குறைந்தபட்சக் கல்வித்தகுதி 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள் சேரலாம்.
வரும் மே 5ம் தேதி தொடங்கி மே 30 வரை நடத்தப்படவிருக்கும் கணினித் தமிழ் சான்றிதழ் படிப்புக்கான கட்டணம் ரூ1000. திங்கள் முதல் வெள்ளிமுதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
மேலும் விவரங்களை 99418 45217 மொபைல் போன் மூலமும் 044-27451645,27417375 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமும் தொடர்பு கொண்டு பெறலாம்.

No comments:

Post a Comment